இந்த பரபரபான சூழலில் செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக எம்பி சுதா உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் மின்னஞ்சல் வாயிலாக கடிதம் எழுதியுள்ளார். இதில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற போது தன்னுடைய கழுத்திலும் லேசான காயம் ஏற்பட்டு இருப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த குற்றவியல் தாக்குதலால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உயர் பாதுகாப்பு மண்டலத்தில் ஏராளமான சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றவாளியைக் கண்டுபிடித்து கைது செய்வதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் எனது தங்கச் சங்கிலி மீட்கப்பட்டு, எனக்கு விரைவில் நீதி கிடைக்க உறுதியளிக்கவும் எனவும் அந்த கடிதத்தில் சுதா குறிப்பிட்டுள்ளார்