கடைசியில் திமுக கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த காங்கிரஸ், வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எதிர்பார்த்தபடி தேர்தலுக்கு பிறகு திமுகவை கழட்டி விட்டு, ஆளும்கட்சியான தவெகவில் ஐக்கியமாகி அமைச்சரவையும் பெற்று விட்டது. இந்த நிலையில், தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் மெகா ஊழல் நடந்துள்ளதாக அக்கட்சியின் எம்.பி. ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஜோதிமணி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது.வேட்பாளர்களைத் தேர்வு செய்த பிறகு அதற்குத் தகுந்தது போல தொகுதிகள் கேட்டுப் பெறப்பட்டுள்ளன. சர்வே என்ற பெயரில் மிகபெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.
கட்சிக்கு உழைத்தவர்கள் புறக்கணிப்பு
கட்சிக்கு நீண்டகாலம் பணியாற்றியவர்களை, வெற்றி வாய்ப்பு உள்ளவர்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, புதியவர்கள், வெற்றி வாய்ப்பில்லாத பலருக்கு தொகுதிகள் கேட்டுப்பெறப்பட்டு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தேரதலில் போட்டியிட வாய்ப்பு பெற்ற சிலர் தேர்தல் முடிந்து சில நாட்களுக்குள் கட்சியில் இருந்து விலகுகின்றனர் அல்லது ஒதுங்கிவிட்டனர். இவர்களுக்கெல்லாம் வாய்ப்பு வழங்கியது யார்? எதனடிப்படையில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது? தவறு செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?