மேலும், இந்த சாலை மூலம் சிறுவாணி, ஆலந்துறை, தொண்டாமுத்தூர், நரசிபுரம், கோவை குற்றாலம், வெள்ளிங்கிரி மலை, ஈஷா யோகா மையம், வைதேகி நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்களுக்கும் நேரடியாக செல்ல முடியும். மேலும் மருதமலை முருகன் கோவிலுக்கு செல்லும் பயணிகளுக்கும் இந்த பைபாஸ் சாலை மிகவும் உதவியாக இருக்கும். இதனால் கோவை–பாலக்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சாலை திறப்பு, சுற்றுப்புற பகுதிகளின் ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பேரூர், மாதம்பட்டி, சுண்டக்காமுத்தூர், தொண்டாமுத்தூர் போன்ற பகுதிகளில் வீட்டு திட்டங்கள், வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு திட்டங்கள் அதிகரிக்கும். கோவை கோட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டப் பிரிவு பொறியாளர்கள் பல சவால்களை சமாளித்து பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில், நீண்ட காலமாக இந்த பைபாஸ் சாலை திறப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.