தமிழகத்தில் 160 கி.மீ வேகத்தில் அதிவேக ரயில்கள்! சாத்தியக்கூறு ஆய்வு ஆரம்பம்!

Published : Jul 10, 2025, 05:33 PM IST

தமிழகத்தில் 160 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் வெளியிட்டுள்ளது. 3 வழித்தடங்களில் இந்த சேவை அமைய வாய்ப்புள்ளது.

PREV
14
160 கி.மீ. வேகத்தில் ரயில் சேவை

தமிழகத்தில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) டெண்டர் வெளியிட்டுள்ளது.

24
பட்ஜெட் அறிவிப்பின் தொடர்ச்சி

தமிழக அரசின் 2025-26 ஆம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பில், முக்கிய மாவட்டங்களை இணைக்கும் அதிவேக ரயில் சேவைக்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் விரிவான திட்ட அறிக்கை (DPR) மூன்று முக்கிய வழித்தடங்களை உள்ளடக்கும்:

சென்னை – செங்கல்பட்டு – திண்டிவனம் – விழுப்புரம் (167 கி.மீ.)

சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் (120 கி.மீ.)

கோவை – திருப்பூர் – ஈரோடு – சேலம் (185 கி.மீ.)

34
விரிவான அறிக்கை தயாரிப்பு

தேர்ந்தெடுக்கப்படும் தனியார் நிறுவனம், திட்டச் செலவு மதிப்பீடுகள், ரயில் நிலையங்கள் அமையவுள்ள இடங்கள், எதிர்பார்க்கப்படும் பயணிகள் போக்குவரத்து மற்றும் நிதி திரட்டும் வழிகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கையைத் தயாரிக்கும். இந்த அறிக்கை, திட்டத்தின் செயல்பாட்டு சாத்தியக்கூறு மற்றும் பொருளாதார தாக்கத்தையும் மதிப்பிடும். அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதை ஆய்வு செய்து, தேவையான திருத்தங்களுக்குப் பிறகு மாநில அரசுக்கு அனுப்பும்.

44
நிதி ஆதரவு எதிர்பார்ப்பு

இந்த அதிவேக ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு, உலக வங்கி மற்றும் மத்திய அரசிடம் இருந்து நிதி ஆதரவைப் பெற தமிழக அரசு எதிர்பார்க்கிறது. இந்தத் திட்டங்கள் தமிழகத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories