மாணவர்கள் உயர்கல்வியை சேர 12ஆம் வகுப்பு தேர்வு தான் முக்கிய பங்கு வகிக்கும். இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களை பொறுத்தே மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர முடியும்.
அந்த வகையில் 2024-25 கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மொத்தம் 8,21,057 பேர் எழுதினர். இதில் 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள் மற்றும் 145 சிறைவாசிகள் எழுதினர். இதில் பொதுத் தேர்வு எழுதிய 7,19,196 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றனர், இது 94.56% தேர்ச்சியாகும்.