பள்ளியில் வாயு கசிவு
சென்னை திருவொற்றியூரில் கிராம தெரு பகுதியில் உள்ள விக்டரி என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி மதியம் வழக்கம் போல ஆசிரியர்கள் பாடம் எடுத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது பள்ளியில் வாய்வு கசிவு ஏற்பட்டு 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் கண் எரிச்சல் வந்தி மயக்கம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். வாயு கசிவு காரணமாக பள்ளிக்கு கடந்த 26ஆம் தேதி முதல் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.