இந்த கியூ.ஆர். குறியீட்டைக் காட்டி, மாநகரப் பேருந்துகள், புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கலாம். இந்த புதிய செயலியின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்து, விரைவில் இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்தத் திட்டம், பயணிகளின் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்துவதோடு, போக்குவரத்துச் சேவைகளை ஒருங்கிணைத்து, நகர்ப்புறப் பயணத்தை மேலும் திறம்பட மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.