மானிய விலையில் உணவு பொருட்கள்
ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மானிய விலையில் அரசி, கோதுமை, பருப்பு, பாமாயில், சக்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானிய திட்டத்தின் மூலம் ஏழை மக்கள் பெரிய அளவில் பயன் அடைந்து வருகின்றனர். விலையில்லா அரசி மூலம் நாள் தோறும் பல வீடுகளில் உணவுகள் சமைக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் வெளி சந்தையை விட குறைவான விலையில் சக்கரை, பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரேஷன் அட்டைகள் உள்ளது. இதில் போலி அட்டைகளும் உள்ளதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. ஒருவருக்கே இரண்டு முதல் 3க்கும் மேற்பட்ட அட்டைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உணவுப்பொருட்களை பெற்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.