தமிழகத்தில் மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களில் மர்ம கும்பல் சொகுசு கார்களை நோட்டமிட்டு திருடி வருகிறது. அந்த வகையில் பென்ஸ், ஆடி, ஜாக்குவார் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான கார்கள் திருடப்படுவதாக தொடர்ந்து போலீசாருக்கு புகார் வந்தது.
இதனையடுத்து போலீசாரும் தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் புதுச்சேரியில் சர்வீஸ் சென்டர் ஒன்றில் இருந்து சொகுசு கார்களை திருட திட்டமிட்டு களத்தில் இறங்கிய திருடன் சட்டேந்திரசிங் ஷகாவாட்டை கடந்த ஜூன் மாதம் புதுச்சேரியில் வைத்து கைது செய்தனர்