செங்கல்பட்டில் கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து! ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் பலி! நடந்தது என்ன?

Published : Apr 01, 2025, 09:29 AM ISTUpdated : Apr 01, 2025, 03:21 PM IST

சென்னையில் நடந்த கார் விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியபோது லாரி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. 

PREV
14
செங்கல்பட்டில் கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து! ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் பலி! நடந்தது என்ன?
குடும்பத்துடன் காரில் மதுரை திரும்பிய போது விபத்து

மதுரை ஜானகி நகர் பதும்பூர் சிக்கந்தர் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் கார்த்திக். சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கார்த்திக், அவரது மனைவி நந்தினி, அவர்களது குழந்தைகளான 7 வயது சிறுமி இளமதி, ஒரு வயது குழந்தை சாய்வேலன் மற்றும் நந்தினியின் தந்தை அய்யனார், அவரது மனைவி தெய்வபூஞ்சாரி மற்றும் கார் ஓட்டுநர் சரவணன் ஆகிய 7 பேரும் பங்கேற்று விட்டு  ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். 

24
சிக்னலில் நின்ற கார் மீது மோதல்

அப்போது சிங்கபெருமாள்கோவில் அருகே உள்ள திருத்தேரி சிக்னலில் இவர்களது கார் நின்றது. அப்போது அதிவேகமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக காரின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் ஒரு வயது குழந்தை, கார் ஓட்டுநர் சரவணன், அய்யனார் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: அதிகாலையிலேயே பொதுமக்களுக்கு குட்நியூஸ்! சிலிண்டர் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

34
ஒரு குழந்தை உட்பட 3 பேர் பலி

மேலும், கார்த்திக், நந்தினி, தெய்வபூஞ்சாரி, இளமதி ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இடிபாடுகளில் சிக்கிய காரை மீட்டு படுகாயமடைந்தவர்களை மீட்டு  செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: இந்த வயசுல இதெல்லாம் தேவையா? மாணவிகளிடம் டபுள் மீனிங் பேச்சு! ஓய்வு பெறும் நேரத்தில் ஆசிரியருக்கு ஆப்பு!

44
போலீஸ் விசாரணை

மேலும் உயிரிழந்த 3 பேரில் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கான அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வாக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடும்பத்துடன் சுபநிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிய நிலையில் விபத்தில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories