இதனையடுத்து ஒவ்வொரு மாவட்டமாக பொதுமக்களை சந்திக்கும் வகையில் திட்டமிட்ட அவர், திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தனது பிரச்சார பயணத்தை முடித்தார். அடுத்ததாக நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அளவுக்கதிகமான கூட்டம் காரணமாக கரூரில் 41 பேர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சிடி நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இவர்களை கைது செய்ய போலீசாரும் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். எந்த நேரமும் போலீசார் கைது செய்ய வாய்ப்பு உள்ளது.