மதுபாட்டில் வாங்கினால் பில் கட்டாயம்
மேலும் சென்னை புறநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இரண்டு வாரங்களில் மதுபானங்களுக்கு பில் வழங்கப்பட இருப்பதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 4800 கடைகளிலும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கூறப்படுகிறது. விரைவில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட உள்ளதால்,
இனி மது வாங்கினால், பில் கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே மதுபாட்டில்களுக்கு இனி கூடுதல் தொகை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது என கூறப்படுகிறது. தமிழக அமைச்சரவையில் கம்பேக் கொடுத்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.