நெல்லையில் இருந்து செப்டம்பர் 25, அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் வியாழன்தோறும் இரவு 9.30 மணிக்கு புறப்படும் ரயில் (வ.எண்: 06070) மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 26. அக்டோபர் 3, 10,17, 24 ஆகிய தேதிகளில் வெள்ளிதோறும் மதியம் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வ.எண்: 06069) மறுநாள் நள்ளிரவு 1.30 மணிக்கு நெல்லை வந்தடையும். இந்த ரயில் திருச்சி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக செல்லும்.
தாம்பரம் டூ நாகர்கோவில்
நாகர்கோவில்- தாம்பரம் சிறப்பு ரயில் (வ.எண் 06012) நாகர்கோவிலில் இருந்து செப்டம்பர் 28, அக்டோபர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் ஞாயிறுதோறும் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் 29, அக்டோபர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (திங்கள்) மாலை 3.30 மணிக்கு புறப்படும் ரயில் வ.எண்: 06011) மறுநாள் காலை 5.15 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். இந்த ரயில் திருச்சி, மதுரை, நெல்லை வழியாக செல்லும்.