ஆஹா முதல்வர்…ஒஹோ முதல்வர் எனும் பிம்பங்களை கட்டமைத்து மட்டுமே ஒரு அரசாங்கத்தை ஆக்கபூர்வமாக நடத்தி விட முடியாது. அவ்வப்போது மட்டுமே வசனங்களை படித்து ஒப்பிக்க சட்டமன்றம் ஒன்றும் சினிமா காட்சி கிடையாது. அன்றாடம் மக்களை, அவர் தம் உணர்வுகளை, சுற்றிலும் நடக்கும் செய்திகளை, இடித்துரைக்கும் எதிர்கட்சிகளை உற்று கவனிக்க வேண்டும். உன்னிப்பாய் ஆழ்ந்து சகலமும் படிக்க வேண்டும். அப்போது மட்டும் தான் வலுவாக ஆட்சி செய்ய முடியும். எனவே சமாளிப்புகளை தவிர்த்து நிஜமான உள்ளுணர்வோடு உங்களை நிருபித்து ஆட்சி செய்யுங்கள். இல்லையெனில் நீங்களும் சென்ற ஆட்சியைப் போலவே தமிழகம் காணும் மற்றும் ஒரு பொம்மை முதல்வரே என எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.