TN Rain Alert: குடை ரெடியா மக்களே! இன்று 5 மாவட்டங்களில் அண்டா அண்டாவா கொட்டப்போகும் கனமழை!

Published : Jun 20, 2026, 07:29 AM IST

TN Rain Alert: தமிழகத்தில் இன்று (ஜூன் 20) சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்தெடுக்க போகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PREV
14
தமிழகத்தில் கனமழை

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் ஒருபக்கம் மழையும், மறுபக்கம் வெயிலும் அடித்து வருகிறது. அதாவது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப் போகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

24
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை

ஜூன் 20ஆம் தேதியான இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யு வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 

நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

34
கோவை டூ கன்னியாகுமரி

ஜூன் 21ஆம் தேதியான நாளை திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ஜூன் 22 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல் ஜூன் 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

44
சென்னையில் மழை பெய்யுமா?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இன்று மற்றும் நாளை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

 ஜூன் 22ஆம் தேதி தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories