இத்திட்டம், தமிழறிஞர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் துணைபுரிந்து, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், அவர்களின் அர்ப்பணிப்பையும் மதிப்பிடும் வகையிலும் சிறப்பாக அமைகிறது.
விண்ணப்பத் தகுதிகள்:
01.01.2025 அன்று 58 வயதைத் தாண்டியிருக்க வேண்டும்.
ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-க்குள் இருக்க வேண்டும் (வருமானச் சான்று அவசியம்).
தமிழ்ப் பணிகளைச் செய்த விவரக்குறிப்பு.
இரண்டு தமிழறிஞர்களின் பரிந்துரை கடிதம்.
ஆதார் அட்டை, குடும்ப அட்டை, துணைவியார் இருந்தால் அவரின் ஆதார் நகல்.
விண்ணப்பப் படிவத்தை மாவட்ட/மண்டல தமிழ் வளர்ச்சி அலுவலகத்திற்கோ அல்லது இணையத்தில் (www.tamilvalarchithurai.tn.gov.in) பதிவிறக்கம் செய்து, முறையாக நிரப்பி 17.11.2025க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு www.tamilvalarchithurai.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.