மக்களின் முன்னேற்றத்தில் எம்ஜிஆர்
அந்த வகையில் எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்கவியலாத பெயர்களில் அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயர் முக்கியமானது. மூன்று முறை தமிழக முதலமைச்சர் பொறுப்பிலிருந்தும், தான், தனது குடும்பம் என்று எண்ணாமல், தமிழக மக்களுக்காக உழைத்தவர்.
பெருந்தலைவர் காமராஜரைப் போலவே, நேர்மையும் நுண்ணறிவும் கொண்ட தலைவராக விளங்கியவர் அமரர் எம்.ஜி.ஆர் அவர்கள். எப்படி தமது திரைப்படங்களில், விவசாயியாக, மாடு மேய்ப்பவராக, ரிக்ஷாகாரராக, குதிரை வண்டி இழுப்பவராக, மீனவராக என மொத்தத்தில் ஒரு சாமானிய மனிதராக, எளிய மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, அவர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் லட்சியவாதியாக அமரர் எம்.ஜி.ஆர் இருந்தாரோ,