பாலில் இருந்து தயாரிக்கப்படும் பனீர், நெய், தயிர், சீஸ், ஐஸ்கிரீம், பால் பவுடர் உள்ளிட்ட பல பொருட்களை இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறது. 1997ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது ஆண்டுக்கு ரூ.2500 கோடி அளவுக்கு வணகம் செய்கிறது. இந்த நிறுவனத்தின் சேர்மனாகவும், மேலாண்மை இயக்குநராகவும் சதீஷ்குமார் செயல்படுகிறார். இவரது மகன் TS சஞ்சய், S.மித்ரா தம்பதியின் திருமணத்தில் கலந்து கொண்ட பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தம்பதிக்கு சுத்தமான நாட்டு மாட்டு நெய்யை பரிசாக வழங்கியது கவனம் ஈர்த்துள்ளது.