புஸ்வானமாகிப்போன டிட்வா! இன்று இரவுக்குள் வலுவிழக்கும்! சென்னைக்கு மழை உண்டா? லேட்டஸ்ட் அப்டேட்!

Published : Nov 30, 2025, 11:38 AM IST

டிட்வா புயல் வலுவிழந்து விட்டதால் சென்னையில் எதிர்பார்த அளவில் மழை பெய்யவில்லை. அதே வேளையில் பலத்த காற்றும், கடல் சீற்றமும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PREV
13
டிட்வா புயல்

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்பகுதியில் உருவான டிட்வா புயல் இலங்கையில் வரலாறு காணாத பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கனமழைக்கு 130க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். இலங்கையில் உக்கிரமாக இருந்த டிட்வா புயல் தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் மெதுவாக வந்து கொண்டிருக்கிறது.

23
டிட்வா புயல் இன்று இரவுக்குள் வலுவிழக்கும்

இன்று அதிகாலையில் சென்னை மற்றும் வடகடலோர பகுதிகளை டிட்வா புயல் நெருங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த புயல் படிப்படியாக வலுவிழந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னையில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. இந்த நிலையில், டிட்வா புயல் இன்று இரவுக்குள் வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம்

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் நிலைகொண்டிருந்த டிட்வா புயலானது, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 07 கி.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, இன்று (நவம்பர் 30) காலை 5.30 மணி அளவில் அதே பகுதியில் மையம் கொண்டிருந்தது.

33
சென்னையில் இருந்து 180 கி.மீ தொலைவில்

காரைக்காலில் இருந்து சுமார் 90 கி.மீ கிழக்கு-வடகிழக்கிலும், வேதாரண்யத்தில் இருந்து சுமார் 120 கி.மீ வடகிழக்கிலும், புதுச்சேரியில் இருந்து சுமார் 130 கி.மீ தென்கிழக்கிலும், இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 170 கி.மீ வடக்கு-வடகிழக்கிலும், சென்னையில் இருந்து சுமார் 180 கி.மீ தெற்கு-தென்கிழக்கிலும் டிட்வா புயல் மையம் கொண்டிருந்தது.

தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைகளுக்கு இணையாக

அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைகளுக்கு இணையாக வடக்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மதியம் மற்றும் மாலையில் வடக்கு நோக்கி நகரும்போது, இந்த புயலானது தென்மேற்கு வங்கக் கடலில் தமிழ்நாடு-புதுச்சேரி கடலோரப் பகுதியிலிருந்து முறையே குறைந்தபட்சம் 70 கி.மீ மற்றும் 30 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருக்கும். பின்பு இன்று இரவுக்குள் டிட்வா படிப்படியாக வலுவிழக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கடல் சீற்றம் இருக்கும்

டிட்வா புயல் வலுவிழந்து விட்டதால் சென்னையில் எதிர்பார்த அளவில் மழை பெய்யவில்லை. அதே வேளையில் பலத்த காற்றும், கடல் சீற்றமும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories