பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. தந்தை, மகன் இடையேயான சட்டப் போராட்டத்திற்கு பின்னர் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் என்பதால் இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, ஐயாவின் மானம், மரியாதை தான் முக்கியம். நீங்கள் இருவரும் பேசினால் என்ன? நீங்கள் கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாமே என பலரும் என்னிடம் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது நல்லது தான். ஆனால் நான் ஒருமுறை, இரண்டு முறை அல்ல 40 முறைக்கும் மேலாக அவரிடம் பேசிவிட்டேன்.