எடப்பாடியை அசிங்கப்படுத்திய பாஜக.! இன்னமும் கூட்டணியில் தொடரனுமா அதிமுக.? கொந்தளிகும் ர.ரக்கள்

Published : Sep 09, 2025, 05:08 PM IST

அதிமுகவில் ஒன்றிணைப்பு தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு செங்கோட்டையன் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். டெல்லி சென்ற அவர், அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழக அரசியல் சூழல் குறித்து கருத்து பரிமாறினார்.

PREV
16

தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. ஆனால் அதிமுகவில் அதிகார மற்றும் உட்கட்சி மோதல் தீவிரமாகியுள்ளது. தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இயங்கி வந்தாலும் அங்கட்சியின் மூத்த தலைவர்களாக இருந்த ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். 

இதனால் தேர்தல் களத்தில் ஒன்றிணைய வேண்டிய வாக்குள் பிரிந்து தோல்விக்கு மேல் தோல்வியை பெற்று வருகிறார்கள். எனவே பிரிந்து சென்ற தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

26

இதற்கு ஏற்றார் போல முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயார் என அறிவித்தார். சசிகலாவும் பிரிந்த தலைவர்கள் ஒருங்கிணைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என தெரிவித்தார். 

ஆனால் ஓபிஎஸ், டிடிவி மற்றும் சசிகலா ஆகியோரை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லையென அறிவித்தார். மேலும் ஓபிஎஸ் கோரிக்கை காலம் கடந்த செயல் என கூறினார். இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக மூத்த தலைவர்கள் எடப்பாடியை சந்தித்து ஒருங்கிணைப்பு தொடர்பாக கோரிக்கையை முன் மொழிந்தனர்.

36

ஆனால் இதனை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் பணியாற்றிய செங்கோட்டையன் அதிமுக தலைமைக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரிந்த தலைவர்கள் ஒருங்கிணைக்க வேண்டும். இல்லையென்றால் அதிமுக தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு இல்லையென வெளிப்படியாகவே கூறினார். 

மேலும் 10 நாட்களுக்குள் இந்த பணியை முடிக்க வேண்டும் என கெடு விதித்தார்.இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அடுத்த நாளே செங்கோட்டையனின் அனைத்து பொறுப்புகளும் பறிக்கப்பட்டது. தற்போது அதிமுக உறுப்பினர் என்ற நிலையில் மட்டுமே உள்ளார்.

46

இதனையடுத்து செங்கோட்டையனின் அடுத்த கட்ட செயல்பாடுகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அந்த வகையில் திடீரென நேற்று காலை விமானம் மூலம் செங்கோட்டையன் டெல்லி சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்ல இருப்பதாக கூறினார். 

யாரையும் சந்திக்க செல்லவில்லையெனவும் தெரிவித்திருந்தார். ஆனால் டெல்லியில் பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. இதனை தமிழக பாஜக தரப்பில் இருந்து மறுக்கப்பட்டது. கூட்டணி கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி ஒருவரை நீக்கிய பிறகு அவரை ஏன் நாங்கள் சந்திக்க வேண்டும் என கேள்வி எழுப்பினர்.

56

இந்த சூழ்நிலையில் இன்று கோவை திரும்பிய செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நேற்றைய தினம் பயணம் செய்கின்ற பொழுது ஹரித்துவார் செல்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றேன். டெல்லி சென்றவுடன் எனக்கு உள்துறை அமைச்சரை சந்திக்கின்ற அனுமதி கொடுக்கப்பட்டதாக கூறினார்.

இதனையடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகிய இருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தமிழகத்தில் தற்போது உள்ளஅரசியல் சூழல் குறித்து கருத்து பரிமாறப்பட்டதாகவும், மேலும் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, இயக்கம் வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கருத்துக்களை அவரிடம் எடுத்துச் சொன்னோம் என தெரிவித்தார்.

66

இந்த நிலையில் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திக்கவே இல்லையென கூறப்பட்ட நிலையில் உண்மையை போட்டுடைத்துள்ளார் செங்கோட்டையன், அதிலும் மத்திய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமனையும் சந்தித்து ஆலோசித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக தலைமைக்கு கெடு விதித்த ஒருவரை கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவரை பாஜக அழைத்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி தொடர்ந்து வரும் நிலையில் கூட்டணி கட்சி தலைவரால் நீக்கப்பட்ட ஒருவரை முக்கியத்துவம் கொடுத்து பாஜக பேசியிருப்பது எடப்பாடி பழனிசாமியை அவமரிதாயாதை செய்திருப்பதாகவே சமூகவலைதளத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. எனவே அதிமுக உடனே பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என தொண்டர்கள் சமூகவலைதளத்தில் விவாதம் நடத்தி வருகிறார்கள.

Read more Photos on
click me!

Recommended Stories