புறக்கணித்த அன்புமணி! படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் வெற்றி பெறுவது எப்படி? கற்றுக்கொடுத்த ராமதாஸ்!

Published : May 16, 2025, 12:18 PM IST

பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய கூட்டத்தில் அன்புமணி உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவில்லை. 216 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். இதுகுறித்து ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.

PREV
14

ராமதாஸ் அன்புமணிக்கு இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வன்னியர் சங்கம் சார்பில் கடந்த 11ம் தேதி சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய ராமதாஸ் தேர்தல் கூட்டணியை பற்றி முடிவெடுக்க நான் இருக்கிறேன். கட்சியில் சரிவர உழைக்காவிட்டால் எம்எல்ஏவாக இருந்தாலும் கடலில் தூக்கி எறிந்துவிடுவேன். மேலும், என்னை கிழவன் என்று ஏமாற்றி விடலாம் என்று எண்ணாதீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.

24

இந்நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால் இக்கூட்டத்தை அன்புமணி உள்பட பல பாமக மாவட்ட தலைவர்கள், செயலர்கள் கூட்டத்தை பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதில் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட ஒருசில நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். மொத்தமாக 216 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 7 மாவட்டத் தலைவர்கள், 8 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

34

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராமதாஸ்: செயல் தலைவர் அன்புமணிக்கு முறையான அழைப்பு விடுக்கப்பட்டது. வரலாம். வந்து கொண்டே இருக்கலாம். மாநாட்டு களைப்பில் இருப்பதால் சிவல் கூட்டத்தில் வரவில்லை. கூட்டத்திற்கு வராதவர்கள் என்னை தொடர்பு கொண்டு காரணங்களை தெரிவித்தனர். பாமகவில் கோஷ்டி மோதல் என்பதே கிடையாது. செயல்பட முடியவில்லை என யாரும் விருப்பம் தெரிவித்தால் விரும்பியபடி மாற்றப்படுவார்கள். சிங்கத்தின் கால்கள் பழுதாகாதபோது சீற்றம் இன்னும் அதிகமாகத் தானே இருக்கும். ஆட்சியை பிடிக்க வேண்டுமென்ற அந்த சீற்றம் எண்ணம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

44

50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளை பரிமாறிக்கொள்வதற்கான கூட்டம் இது. 50 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்று பெறுவது எப்படி? என்ற ஆலோசனையை கூறியுள்ளேன். தனித்து நின்றாலும் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். நிச்சயமாக கூட்டணி அமைத்தே போட்டி என ராமதாஸ் தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories