இதனையடுத்து, வருமானத்துக்கு அதிகமாக 35.79 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் விஜயபாஸ்கருக்கு எதிராக கடந்த மே மாதம் 216 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் 10,000 பக்கங்கள் கொண்ட 800 சொத்து ஆவணங்களின் விவரங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.