மாணவர்களுக்கு நவீன கால கல்விமுறை
நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறையும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை தமிழக பள்ளிக்கல்வித்துறையால் செயல்படுத்தப்படுகிறது.
அதன் படி கல்விக்கு மட்டுமில்லாமல் கலை திறமையை வளர்க்கவும், ஊக்குவிக்கவும் போட்டிகள் நடத்தப்படுகிறது. வட்டார,நகர, மாநில அளவிலான போட்டிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த போட்டியில் பாடல், நடனம், மிமிக்ரி என பல தலைப்புகளில் மாணவர்கள் தங்களது திறமையை காண்பித்து வருகிறார்கள்.