ஜனவரி 25வரை நீட்டிப்பு
அதன்படி, நேற்று (18.1.2025) வரை தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 87 லட்சத்து 14 ஆயிரத்து 464 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 85 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள 15 சதவிகித மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வருகின்ற 25.01.2025 அன்று வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.