ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலத்தின் போது மீன்பிடி விசைப்படகுகள்/இழுவலைப்படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்து வாழும் மீனவ குடும்பங்களுக்கு தொழிலின்றி வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதால், மீன்பிடி தடைகால நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 18.08.2023 அன்று நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டதற்கிணங்க, கடந்த ஆண்டு முதல் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையானது ரூ.5,000-லிருந்து ரூ.8,000-ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது