இந்த நிலையில் இன்று தனக்கு ஆர்த்தியிடம் இருந்து விவகாரத்து வேண்டும் என்பதற்கான விளக்கத்துடன் நடிகர் ரவி மோகன் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதே போல், ஆர்த்தி தரப்பில் ஜீவனாம்சம் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தனக்கு மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இந்த மனுக்களுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஜூன் 12 ம் தேதிக்கு சென்னை 3வது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.