பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்ற வார்த்தையே கேட்டாலே அளவில்லாத குஷிதான். அதுவும் தொடர் விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் பொங்கல் பண்டிகையின் முந்தைய நாளான ஜனவரி 13ம் தேதி அன்று ஆருத்ரா தரிசனம் திருவிழாவை முன்னிட்டு ராமதாநாதபுரம் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.