இந்நிலையில், தேர்வுத்துறை இயக்குனர் சசிகலா, தேர்வு அட்டவணையை தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி இருக்கிறார். இது தொடர்பாக இன்று காலை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளரை சந்தித்து தேர்வ அட்டவணையை அவர் வழங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வரும் நவம்பர் 4ஆம் தேதி பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .