இந்நிலையில், வங்கக்கடலில் இன்று காலை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 26-ம் தேதி அதாவது நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகிற 27ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு ‘மோன்தா’ (Montha) என தாய்லாந்து நாடு பெயரிட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்டே்டை மாவட்டங்களில் 27ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.