அவரது இருக்கைக்கு பின்னால் 50 வயது மதிக்கத்தக்க நபர் அமர்ந்திருந்தார். பேருந்து பெரியாம்பட்டி ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்த போது, அந்த நபர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டதால், பேருந்தில் இருந்த பொதுமக்கள் அவரை தட்டிக்கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.