மதுரை மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள எல்ஐசி கிளை அலுவலகத்தின் 2வது தளத்தில் கடந்த டிசம்பர் 17ம் தேதி இரவு 8.15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பணியில் இருந்த பெண் முதுநிலை கிளை மேலாளர் கல்யாணி நம்பி (55) தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், உதவி நிர்வாக அதிகாரி ராம கிருஷ்ணன் என்பவருக்கு காலில் தீக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து கல்யாணி நம்பி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.