மதுரை மாவட்டம் ஆரம்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து பழனிக்கு அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டனர். அப்போது மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கட்டபுளி நகர் பகுதியில் பேருந்து சென்ற போது பின் பக்க டயர் மோசமாக இருந்தது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போதே திடீரென பின் பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.