மதுரை மாவட்டம் எழுமலை கோட்டைப்பட்டியை சேர்ந்த மகாலிங்கம். இவர் சிறப்பு படை காவலராக 2023ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு முன்பாக நேற்று இரவு முதல் பாதுகாப்பு பணியில் மகாலிங்கம் இருந்துள்ளார். அப்போது இன்று அதிகாலை 3 மணியளவில் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.