கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கோவையிலும், நீலகிரியிலும் கனமழை கொட்டி வருகிறது. கோவை மாவட்டத்தில், வேளாண் நிலங்கள் அதிகம் உள்ள புறநகர்ப் பகுதிகளில் விட்டு, விட்டு கன மழையும், தொடர் சாரல் மழையும் பெய்தது.