மேலும் சென்னை - மங்களூரு எக்ஸ்பிரஸ், சென்னை-மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ், திருச்சி - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்களில் தலா ஒரு ஸ்லீப்பர் பெட்டிகளும், சென்னை - திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ்< சென்னை - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - மும்பை, கன்னியாகுமரி புதுடெல்லி எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் தலா ஒரு ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்பட்டு மூன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் இணைக்கபட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
பின்வாங்க மறுக்கும் ரயில்வே
இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கும் முடிவை கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்கள். இதனைத்தொடர்ந்து நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்படாது என தெற்கு ரயில்வே தெரிவித்தது.
அதே வேளையில் சேரன், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில், திருவனந்தபுரம் ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் திட்டமிட்டபடி குறைக்கப்படும் என்பதில் ரயில்வே உறுதியாக உள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.