தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களாக கடுமையான வெயில் கொளுத்தியது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, நாகர்கோவில் அனைத்து இடங்களிலும் 35 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் வாட்டி வதைத்தது.
இந்த வெயிலில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும்? என மக்கள் ஏங்கித் தவித்து வந்த நிலையில், தென் மேற்கு பருவமழை தொடங்கியதால் கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.