நாட்டின் முக்கியமான நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே உணவுடன் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படும். வந்தே பாரத் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே அசைவ உணவு வேண்டுமா? இல்லை சைவ உணவு வேண்டுமா? என்பதை பயணிகள் தேர்வு செய்து கொள்ளலாம்.
வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவு ரத்தா?
பயணிகள் தேர்வு செய்யும் உணவு வந்தே பாரத் ரயில் பயணத்தின்போது அவர்களுக்கு வழங்கப்படும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவை, மைசூரு திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில்களில் காலை உணவு பட்டியலில் இருந்து அசைவ உணவு நீக்கப்பட்டுள்ளதாகவும் ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே ''அசைவ உணவு மதியம் மற்றும் இரவு உணவுக்கு மட்டுமே கிடைக்கும்'' என்று அறிவிப்பு கூறப்படுவதாகவும் தகவல் வெளியானது.