41 குளங்களைச் சீரமைக்க ரூ. 120 கோடி
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஏற்கனவே 179 குளங்களில், தூர்வாருதல், ஆழப்படுத்துதல், பழுது பார்த்தல், அழகுபடுத்துதல், பாதுகாப்பு வேலி அமைத்தல், மண் அரிப்பைத் தடுக்க தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. தற்போது, மேலும் 35 குளங்களில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எஞ்சிய 41 குளங்களைச் சீரமைக்க ரூ. 120 கோடிக்கு டெண்டர்கள் விடப்பட்டுள்ளன.
மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், அந்தந்த மண்டலங்களில் உள்ள துணை ஆணையர்களை நேரடியாகப் பணிகளை மேற்பார்வையிட அறிவுறுத்தியுள்ளார். இந்தப் பணிகள் பருவமழைக்கு முன் முடிக்கப்படும். குளங்களின் கொள்ளளவு அதிகரிப்பதால், அதிக மழைநீரைச் சேமித்து நிலத்தடி நீர் மட்டம் உயர உதவும்" என்று தெரிவித்தார்.