அண்மையில் பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தப் போட்டியின் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆனால், போட்டி நடைபெறும் நாளில் அவரது எடை சரிபார்க்கப்பட்டபோது 50 கிலோவுக்கு கூடுதலாக 100 கிராம் இருந்ததால் அவர் ஒலிம்பிக் விதிமுறைப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனம் உடைந்த அவர் மல்யுத்த போட்டிகளில் இருந்தே விலகுவதாக அறிவித்தார்.