இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் உலகின் பணக்கார விளையாட்டு தொடர்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அண்மையில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.700 கோடிக்கு மேல் 182 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
இதேபோல் வீராங்கனைகளுக்கு Women's Premier Leagueஎன்ற பெயரில் ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது. பெண்கள் ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ், உபி வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 5 அணிகள் உள்ளன. இந்நிலையில், Women's Premier League தொடருக்கான மினி ஏலம் இன்று பெங்களூருவில் நடைபெற்றது.