டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்யும் போது சஞ்சு சாம்சன் காயமடைந்தார். இதனால் உடனடியாக டக்அவுட்டுக்குத் திரும்பிய அவர் அந்த போட்டியில் விளையாடவில்லை. இதற்கு அடுத்து ல்க்னோ போட்டியிலும் விளையாடவில்லை. ஆனால் சஞ்சு சாம்சன் காயம் என்னும் போர்வையில் ராஜஸ்தான் அணியில் இருந்து திட்டமிட்டு ஓரம்கட்டப்படுவதாக ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சஞ்சு சாம்சனுக்கும், ராஜஸ்தான் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் இடையே மோதல் இருந்து வருவதாக தொடர்ந்து தகவல் பரவி வந்தன. டெல்லிக்கு எதிரான போட்டியின்போது சூப்பர் ஓவரில் சஞ்சு சாம்சன் ஜோப்ரா ஆர்ச்சரை பந்துவீச முடிவு செய்த நிலையில், ராகுல் டிராவிட்டும் மற்ற அணி நிர்வாகிகளும் சந்தீப் சர்மாவை பவுலிங் செய்ய வைத்துள்ளார். இதேபோல் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், ரியான் பராக்கை சாம்சன் களமிறக்க விரும்பிய நிலையில், டிராவிட் ஹெட்மயரை களமிறக்கி இருக்கிறார்.