RCB அணிக்கு திரும்பிய ஜோஸ் ஹேசில்வுட்! கப் கன்பார்ம்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Published : May 25, 2025, 02:48 PM IST

ஆர்சிபி அணியின் பாஸ்ட் பவுலர் ஜோஸ் ஹேசில்வுட் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னதாக அந்த அணியுடன் மீண்டும் இணைந்துள்ளார். 

PREV
14
Josh Hazlewood Returns to RCB

ஐபிஎல் 2025 சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. இந்த முறையாவது கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படும் ஆர்சிபி அணி 13 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 4 தோல்விகளுடன் 17 புள்ளிகள் (+0.225 ரன் ரேட்) பெற்று 3வது இடத்தில் உள்ளது.

24
ஆர்சிபி அணியில் இணைந்த ஜோஸ் ஹேசில்வுட்

ஆர்சிபி அணி முதல் 2 இடங்களை பிடிக்க நல்ல வாய்ப்பு கணிந்துள்ளது. அதாவது லக்னோவுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற வேண்டும். சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி தோல்வி அடைய வேண்டும். 

இது நடந்தால் ஆர்சிபி முதல் 2 இடங்களை பிடிக்கும். இந்நிலையில், ஆர்சிபி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக அந்த அணியின் முக்கிய பாஸ்ட் பவுலர் ஜோஸ் ஹேசில்வுட் அணியுடன் இணைந்துள்ளார்.

34
காயத்தால் அவதிப்பட்ட ஹேசில்வுட்

ஆர்சிபி அணியின் வெளிநாட்டு வீரர்களான பில் சால்ட், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், லுங்கி நிகிடி ஆகியோர் ஏற்கெனவே அணியில் இணைந்தனர். ஆனால் அந்த அணியின் துருப்புச்சீட்டாக இருக்கும் பாஸ்ட் பவுலர் ஜோஸ் ஹேசில்வுட் இந்தியா திரும்பாமல் இருந்து வந்தார். 

தோள் பட்டையில் ஒரு சிறிய காயம் காரணமாக சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியிலும், ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியிலும் ஹேசில்வுட் விளையாடவில்லை.

ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆஸ்திரேலியா சென்ற அவர் மீண்டும் எப்போது இந்தியா திரும்புவார்? என ஆர்சிபி ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஜோஸ் ஹேசில்வுட் மீண்டும் ஆர்சிபி அணியுடன் இணைந்துள்ளார். அவர் ஆர்சிபி அணியுடன் இணையும் வீடியோவை ஆர்சிபி நிர்வாகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

அந்த வீடியோவில் 'ஆர்சிபி ரசிகர்களே! ஐ அம் பேக்' என்று ஹேசில்வுட் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

44
ஆர்சிபி அணிக்கு பெரும் பலம்

ஜோஸ் ஹேசில்வுட் ஆர்சிபி அணிக்கு மீண்டும் திரும்பியது அந்த அணிக்கு மிகப்பெரும் பலமாகும். ஏனெனில் ஹேசில்வுட் இல்லாமல் சிஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக விளையாடிய ஆர்சிபி 200 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தது. 

ஜோஸ் ஹேசில்வுட் இல்லாமல் ஆர்சிபி அணியின் பந்துவீச்சு பலவீனம் வெளிப்படையாக தெரிந்தது. இப்போது அவர் வந்து விட்டால் ஆர்சிபி பந்துவீச்சில் மீண்டும் பலம் பெறுகிறது. செவ்வாய்க்கிழமை லக்னோவுக்கு எதிரான போட்டியில் ஜோஸ் ஹேசில்வுட் விளையாட இருக்கிறார்.

Read more Photos on
click me!

Recommended Stories