இதன் காரணமாக 2025 ஐபிஎல் சீசனின் சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யாவால் விளையாட முடியாது. இதனால் அந்த ஒரு போட்டிக்கு மட்டும் இளம் வீரர் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்ட்யா விளையாடாததால் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மும்பை கேப்டனாக நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் சூர்யகுமார் யாதவ்வை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கேப்டனாக நியமித்துள்ளது.
சூர்யகுமார் யாதவ்வை பொறுத்தவரை இந்திய கிரிக்கெட் அணியின் டி20 கேப்டனாக உள்ளார். அவர் வெற்றிகரமான கேப்டனாக வலம் வருவதால் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கேப்டனாகியுள்ளார். ஹர்திக் பாண்ட்யாவுக்கு பிறகு சூர்யகுமார் மும்பை அணியின் நிரந்தர கேப்டனாக ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தோனி vs ரோகித் சர்மா! ஐபிஎல் 'டான்' யார்? கேப்டன்சியில் அதிக வெற்றிகளை குவித்தது யார்?