17வது ஓவரை சந்தீப் சர்மா 9 ரன்கள் கொடுத்தார். 18வது ஓவரில் தீக்சனா 7 ரன்கள் மட்டுமே கொடுத்ததால் கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்டது. துஷார் தேஷ்பாண்டே வீசிய 19வது ஓவரில் தோனி 1 பவுண்டரி, 1 சிக்சரும், ஜடேஜா 1 சிக்சரும் விளாசியதால் 19 ரன்கள் வந்தது. இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட தோனி (11 பந்தில் 16 ரன் ) சந்திப் சர்மாவின் சூப்பர் பவுலிங்கில் ஹெட்மயரிடம் கேட்ச் ஆனார். அதன்பிறகு களமிறங்கிய ஜேமி ஓவர்டன் 1 சிக்சர் அடித்தாலும் வெற்றி இலக்கை நெருங்க முடியவில்லை.
சந்தீப் சர்மா கடைசி ஓவரில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்ததால் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் வீரர் வனிந்து ஹசரங்கா 4 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி மேட்ச் வின்னராக ஜொலித்தார்.
பவுலிங் மட்டுமின்றி பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட ராஜஸ்தான் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 3வது போட்டியை ஆடும் சிஎஸ்கேவுக்கு இது 2வது தொடர் தோல்வியாகும்.
SRH vs DC: ஸ்டார்க் மிரட்டல் பந்துவீச்சு! சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஊதித்தள்ளிய டெல்லி!