28 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 37 ரன்கள் அடித்த அவர் பதிரனா பந்தில் போல்ட் ஆனார். தொடர்ந்து ஜோப்ரா ஆர்ச்சர் ரன் ஏதும் எடுக்காமல் கலீல் அகமது பந்தில் அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் யாரும் பெரிய அளவில் அடிக்காததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 190 ரன்களை தாண்ட முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே தரப்பில் நூர் அகமது, கலீல் அகமது, பதிரனா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஜேமி ஓவர்டன் 2 ஓவர்களில் 30 ரன்களை வாரி வழங்கினார்.
183 என்ற சவாலான இலக்கை நோக்கி சிஎஸ்கே பேட்டிங் செய்கிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஐபிஎல் 18வது ஆண்டு விழாவையொட்டி சிஎஸ்கே முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பிசிசிஐ சார்பில் நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Hardik Pandya: மீண்டும் அதே தவறு! ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை?