தொடர் புறக்கணிப்பு! அவமானம்! 1077 நாட்களுக்கு பிறகு தன்னை நிரூபித்த கருண் நாயர்! யார் இவர்?

Published : Apr 14, 2025, 11:33 AM IST

டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் கருண் நாயர் 1077 நாட்களுக்கு பிறகு ஐபிஎல்லில் இடம்பிடித்து முதல் போட்டியிலேயே தான் யாரென்று நிரூபித்துள்ளார். 

PREV
14
தொடர் புறக்கணிப்பு! அவமானம்! 1077 நாட்களுக்கு பிறகு தன்னை நிரூபித்த கருண் நாயர்! யார் இவர்?

Delhi Capitals Karun Nair Comeback: ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 5 விக்கெட் இழந்து 205 ரன்கள் குவித்தது. பின்பு விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டெல்லி அணி வீரர் கருண் நாயர் 40 பந்துகளில் 12 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 89 ரன்கள் எடுத்தார்.
 

24
Karun Nair, DC, IPL

கருண் நாயரை தவிர மற்ற டெல்லி வீரர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. டெல்லி அணி தோற்றாலும் கருண் நாயரின் மிகச்சிறப்பான இன்னிங்ஸ் பேசும்பொருளாகியுள்ளது. 1077 நாட்களுக்கு பிறகு ஐபிஎல்லில் களமிறங்கிய கருண் நாயர் ஐபிஎல் தொடரில் தனது அதிகப்பட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார். 33 வயதான அவர் கடைசியாக 2022 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.

2018 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அவர் கடைசியாக அரைசதம் அடித்து இருந்தார். அதன்பிறகு சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு தான் யாரென்று நிரூபித்துள்ளார். நேற்றைய போட்டியில் உலகின் நம்பர் 1 பவுலரான ஐஸ்பிரித் பும்ராவின் பந்துகளை அவர் விளாசியத் தள்ளியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

Virat Kohli: விராட் கோலியின் 10th மார்க் ஷீட் வைரல்! எவ்ளோ மார்க் தெரியுமா?

34
Karun Nair, IPL 2025

கருண் நாயர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர். இவரது பெற்றோர்களின் சொந்த ஊர் கேரள மாநிலம் செங்கனூர் ஆகும். கருண் நாயர் கடந்த 2016ம் ஆண்டே உலகம் முழுவதும் பிரபலமானவர். 2016ல் நவம்பர் மாதம் மொகாலியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான் டெஸ்ட் போட்டியில் 300 ரன்கள் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அதன்பிறகு அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்திய அணியில் இடம் கிடைக்க தொடர்ந்து போராடி வந்தார். கடந்த ஆண்டு முஷ்டாக் அலி டிராபி, விஜய் ஹசாரே டிராபி அவரது வாழ்க்கையையே மாற்றியது எனலாம். சையத் முஷ்டாக் அலி டிராபியில் ஆறு இன்னிங்ஸ்களில் 177 ஸ்ட்ரைக் ரேட்டில் 255 ரன்கள் எடுத்தார் நாயர். விஜய் ஹசாரே டிராபியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். அங்கு அவர் ஐந்து இன்னிங்ஸ்களில் 542 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

44
DC vs MI, Sports News

ரஞ்சி டிராபியில் விதர்பா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் கருண் ​​நாயர் 16 இன்னிங்ஸ்களில் 863 ரன்கள் எடுத்து அணி வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார். இந்த சிறப்பான செயல்பாடுகளால் யார் இந்த கருண் நாயர்? என இந்தியா முழுவதும் பேச வைத்தார். இதனால் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தின் போது கருண் நாயர் கேபிடல்ஸ் அணியால் ரூ.50 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

டெல்லி அணியில் இடம்பிடித்தபோதும் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அந்த அணியின் வீரர் டாப் டூ பிளிசிஸ் காயத்தால் அவதிப்பட்ட நிலையில், நேற்றைய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கருண் நாயருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைத்தது. அந்த ஒரே ஒரு வாய்ப்பிலும் தனது திறமையை நிரூபித்து இப்போது மீண்டும் ஹீரோவாக ஜொலித்துள்ளார் கருண் நாயர்.

டி20 கிரிக்கெட்டில் 100 அரைசதங்கள் அடித்த முதல் ஆசிய வீரராக விராட் கோலி சாதனை!

Read more Photos on
click me!

Recommended Stories