படுதோல்விகளுக்கு காரணம் என்ன?
ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைய முதன்மையான மற்றும் முக்கியமான காரணம் பேட்ஸ்மேன்கள் தான். அணியை முன்னெடுத்து செல்ல வேண்டிய கேப்டன் ரோகித் சர்மா 6 சரசாரியுடன் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். கேப்டன்சியிலும் சொதப்பினார். முதல் டெஸ்ட்டில் சதம் அடித்த விராட் கோலி, அதன்பிறகு ஒரு அரைசதம் கூட அடிக்காமல் அவுட் சைடு ஆப் ஸ்டெம்புக்கு விக்கெட்டுகளை தாரைவார்த்து செல்வதை வழக்கமாக்கினார்.
இதேபோல் சுப்மன் கில், பெரிதும் எதிர்பார்த்த ரிஷப் பண்ட் சரியாக பேட்டிங் செய்யவில்லை. கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், ஜடேஜா ஆகியோர் ஓரளவு விளையாடினாலும் அணிக்கு தேவையான பங்களிப்பு செய்யவில்லை. அதே வேளையில் இளம் வீரர்கள் நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் நன்றாக விளையாடினார்கள்.
மறுபக்கம் பும்ரா இந்த தொடரில் 32 விக்கெட்டுகளை சாய்த்து கம்பீரமாக நிற்க, அவருக்கு மற்ற பாஸ்ட் பவுலர்கள் ஆதரவு இல்லை. சிராஜ், ஹர்சித் ராணா, ஆகாஷ் தீப் என மற்ற பவுலர்கள் எதிர்பாரத்த அளவு செயல்படாததும் அணியின் தோல்விக்கு காரணமாகி விட்டது.
ரோகித் சர்மாவுக்கு அடுத்த ஷாக்; சாம்பியன்ஸ் டிராபியில் கேப்டனாகும் ஹர்திக் பாண்ட்யா? பரபரப்பு தகவல்!