நாளை என்ன நடக்கும்?
தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் (22 ரன்), கே.எல்.ராகுல் (13 ரன்) விரைவில் வெளியேறினார்கள். விராட் கோலி வெறும் 6 ரன்னில் போலண்ட் வீசிய வழக்கமான அவுட் சைடு ஆப் ஸ்டெம்ப் பந்தை தேவையில்லாமல் அடித்து ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். சுப்பன் கில் (13 ரன்) தவறான ஷாட்டில் வீழ்ந்தார். ஒருகட்டத்தில் இந்தியா 78/4 என்ற நிலையில் இருந்தபோது மைதானத்தில் சரவெடிபோல் வெடித்த ரிஷப் பண்ட் 33 பந்தில் 61 ரன்கள் அடித்து இந்திய அணியை ஓரளவு சரிவில் இருந்து மீட்டார். அவர் 6 பவுண்டரி 4 சிக்சர்கள் விளாசினார்.
2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 141/6 என பரிதவிக்கும் நிலையில் ஜடேஜா (8 ரன்), வாஷிங்டன் சுந்தர் (6) களத்தில் உள்ளனர். இந்திய அணி 145 ரன்கள் முன்னிலையில் உள்ளது. பேட்ஸ்மேன்களுக்கு கடினமான இந்த பிட்ச்சில் ரன்கள் அடிப்பது சிரமம் என்பதால் 220 முதல் 250 ரன்கள் வரை இலக்கு நிர்ணயித்தால் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
இன்னும் 4 விக்கெட்டுகளே கையில் இருப்பதால் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் முதல் செஷனை சமாளித்தால் இன்னும் 60 முதல் 80 ரன்கள் வரை எடுக்க முடியும்.
மனைவியை பிரியும் யுஸ்வேந்திரா சாஹல்? இன்ஸ்டாவில் அன்ஃபாலோ செய்ததால் சர்ச்சை!