அந்த விக்கெட்டை எடுத்த பிறகுதான், எந்த ஆரவாரமும் இல்லாமல், வானத்தை நோக்கி கைகளை உயர்த்தி, தனது தாய்க்கு அந்த விக்கெட்டை அர்ப்பணித்தார். இந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 31 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை முகேஷ் கைப்பற்றினார். ஏனெனில் முகேஷ் செளத்ரி இன்று கிரிக்கெட்டில் ஜொலிக்க முக்கிய காரணம் அவரது தாயார் தானாம். அம்மா கொடுத்த ஊக்கத்தால் தான் இன்று இந்த நிலையில் இருக்கிறார் முகேஷ்.
போட்டி முடிந்ததும், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த முகேஷை, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஓடிவந்து ஆரத்தழுவிக்கொண்டார். பரிசளிப்பு விழாவில் பேசிய ருதுராஜ், இந்த வெற்றியை முகேஷுக்கு சமர்ப்பிப்பதாகக் கூறினார். "முகேஷுக்கு இது மனதளவில் மிகப்பெரிய போராட்டமாக இருந்திருக்கும். இப்படி ஒரு சூழலில் இருந்து மீண்டு, அணிக்காக விளையாட வருவதற்கு அசாத்திய தைரியம் வேண்டும். அவருடைய அந்த மன உறுதிக்கு நாங்கள் தலைவணங்குகிறோம். இந்த வெற்றி அவருக்கானது," என்று ருதுராஜ் தெரிவித்தார்.